இந்தியாவின் ‘தங்கச்சுரங்கம்’ நீங்கள்.... ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் கமல்ஹாசன் பேசினார்!

tamilnadu-samugam
By Nandhini Jul 15, 2021 05:07 AM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் காணொளி வாயிலாக அவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த உரையாடலில் தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் இந்த காணொளி வாயிலாக கமல் ஹாசனுடன் நேற்று கலந்துரையாடினார்கள்.

அப்போது கமல்ஹாசன் அவர்களுடன் பேசுகையில், “வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’ நீங்கள். இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்திற்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.

இந்தியாவின் ‘தங்கச்சுரங்கம்’ நீங்கள், வெறும் தங்க பதக்கம் அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை. போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுய மரியாதையை போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள்.

நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களை பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.

அப்போது செல்வி ரேவதி, எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களை ஊக்குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு பதக்கங்களை வெல்ல எங்கள் முழு முயற்சியை செலுத்துவோம் என்றார்.