பல ஆண்டுகளாக ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய சிவசங்கர் பாபா! யாஹூ ஈமெயிலை முடக்கிய சிபிசிஐடி

tamilnadu-samugam
By Nandhini Jul 10, 2021 08:07 AM GMT
Report

கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபா, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்தார். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, இவர் மீது கடந்த 13ம் தேதி புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, முன்னாள் மாணவிகள் அடுத்தடுத்து இவர் மீது புகார் அளித்து வந்ததால், சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில், 3 வழக்குகளில் 2 வழக்கு போக்சோவில் பதிவான நிலையில், சட்ட வல்லுனர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை செய்து வருகிறது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் இவர் மீது புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, ஒரு வழக்கு கீழ் மட்டும் சிவசங்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிவசங்கர் பாபா, பல ஆண்டுகளாக ஆபாசமாக சாட் செய்து, பயன்படுத்தி வந்த யாஹூ ஈமெயில் முடக்கப்பட்டுள்ளது.

சுஷில் ஹரி இன்டெர்நேஷனல் பள்ளி ஈமெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

பல ஆண்டுகளாக ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய சிவசங்கர் பாபா! யாஹூ ஈமெயிலை முடக்கிய சிபிசிஐடி | Tamilnadu Samugam