2029-ம் ஆண்டு வரை கொரோனா பாதிப்பு நீடிக்க வாய்ப்பு - பிலவி வருட பஞ்சாங்கத்தில் ஜோதிடர்களின் கணிப்பு!

tamilnadu-samugam
By Nandhini Jul 06, 2021 06:59 AM GMT
Report

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இப்போது பல வகைகளில் உருமாறி, தீவிரமாக பரவி வருகிறது கொரோனா.

இது குறித்து பிலவி வருட பஞ்சாங்கத்தில் ஏற்கனவே புதிய வகை வைரஸ்கள் மக்களை அதிகளவில் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது போன்றே தற்போது, இந்த கொரோனா வைரஸ் உருமாறி பலவித பெயர்களில் பரவி வருகிறது. மட்டுமின்றி, கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண பூஞ்சைத் தொற்றுக்களும் பரவ ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில், இந்த கொரோனா பாதிப்பு வரும் 2023-ம் ஆண்டு வரை இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்திருக்கிறார்கள். அதாவது, ராகு பகவான் கால புருஷ தத்துவத்திற்கு 2-வது வீடான ரிஷப ராசியில் உள்ளார்.

இது தன குடும்ப வாக்குஸ்தானம். பலருக்கும் வேலையிழப்பு, பண நெருக்கடிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதேபோல குரு தற்போது லாப ஸ்தானமான 11வது வீட்டில் கும்ப ராசியிலிருந்து வக்ரகதியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் அக்டோபர் மாதம் மகர ராசிக்கு சென்று மீண்டும் நேர்கதியில் கும்ப ராசிக்கு பயணிப்பார்.

2022-ம் ஆண்டு குரு 12-வது வீடான மீன ராசிக்கு நுழைவார். அதே நேரத்தில் ராகு பகவான் தற்போது உள்ள ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். அந்த கால கட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

வேலை இழந்த பலருக்கும் புது வேலை கிடைக்கும். நிறைய பண வரவு கிடைத்து நிதி நெருக்கடிகள் நீங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திலிருந்து மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்றும், அதற்கு குருவின் சஞ்சாரம்தான் காரணம் என்று ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதத்திலிருந்து உலகம் மற்றொரு சவாலை எதிர்கொள்ள உள்ளதாகவும், குரு பகவான் அப்போது கும்ப ராசியில் நேர் கதியில் தனது பயணத்தை தொடங்குவார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

குருவின் பயணம் படிப்படியாக கும்பம், மீனம் என கடந்த 2023-ம் ஆண்டு மேஷ ராசியில் பயணிக்கும் காலத்தில் ராகுவின் சஞ்சாரமும் மேஷ ராசியில் இருக்கும் போது கொரோனாவின் வீரியம் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையும் என்று கணித்திருக்கிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் பாதிபை நாம் 2025-ம் ஆண்டு வரை சந்தித்து தான் ஆக வேண்டும் என்றும், அதே சமயம் 2029-ம் ஆண்டு வரை இந்த கொரோனா பாதிப்பு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால், அந்த காலக்கட்டத்தில் இந்தளவிற்கு அதன் பாதிப்பு இருக்காது என்றும் ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளனர்.

2029-ம் ஆண்டு வரை கொரோனா பாதிப்பு நீடிக்க வாய்ப்பு - பிலவி வருட பஞ்சாங்கத்தில் ஜோதிடர்களின் கணிப்பு! | Tamilnadu Samugam