கணவர் மரணத்தில் சந்தேகம் - பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும் - மனைவி பரபரப்பு புகார்
காதல் கணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இறந்த கணவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய, தனக்கு நியாயம் வழங்க கோரி இளம் பெண் ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் மல்லிகா (21). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயலிங்கம் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த திருமணத்திற்கு விஜயலிங்கத்தின் தாயார் கிருஷ்ணவேனிக்கு விருப்பம் இல்லை. இதன் காரணமாக அடிக்கடி கிருஷ்ணவேனிக்கும், மல்லிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, விஜயலிங்கம் தனது வீட்டில் தனி அறையில் தனியாக சமைத்து மல்லிகாவுடன் வாழ்ந்து வந்தார். குடும்ப தகராறு அதிகமாகவே கடந்த ஆண்டு மல்லிகா, மகளிர் காவல் நிலையத்தில் விஜயலிங்கத்தின் தாய் கிருஷ்ணவேணி மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு மல்லிகாவும், விஜயலிங்கமும், மல்லிகாவின் தாயார் வீட்டிற்கு வந்து சுமார் ஒன்றரை மாதங்களாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 21ம் தேதி விஜயலிங்கத்தின் தாயார் விஜயத்திற்கு போன் செய்து, நீயும், மல்லிகாவும் வீட்டிற்கு வந்து விடுங்கள்.
நான் மீண்டும் இதுபோன்று சண்டை போட மாட்டேன் என்று உறுதி அளித்து வீட்டிற்கு அழைத்துள்ளார். அன்று அவர்களுக்கு கரி விருந்து படைத்துள்ளார். அன்று மாலையே விஜயகுமாருக்கு சேரவேண்டிய சொத்துக்கும், விஜயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கையெழுத்திட சொல்லி விஜயகுமார் மற்றும் மல்லிகாவை நிர்பந்தித்திருக்கிறார் கிருஷ்ணவேனி. இதனால் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் அடித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் விஜயலிங்கம் மல்லிகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். இந்தப் பிரச்சினையை சுமுகமாக பேசி முடிக்க கிருஷ்ணாவேனியுடனே தங்கி உள்ளார். அன்று இரவு 2 மணி அளவில் மல்லிகாவிடம் போனில் உரையாடியுள்ளார். இந்நிலையில் 22ம் தேதி காலை 6 மணி அளவில் விஜயலிங்கம் இறந்து விட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் வாயிலாக மல்லிகாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையறிந்த, மல்லிகா தன் மாமியாரிடம் சென்று விஜயலிங்கத்தின் மரணத்திற்கான காரணத்தை அறிய முயற்சித்துள்ளார். இதனையடுத்து, மல்லிகாவை சரமாரியாக தாக்கிய அந்த குடும்பத்தினர் அவசர அவசரமாக விஜயலிங்கத்தின் உடலை புதைத்து விட்டனர். அதைத் தொடர்ந்து, மீண்டும் மீண்டும் மல்லிகா தன் கணவரின் சாவிற்கு காரணத்தை அறிய முயற்சி செய்த போது அவர் கிருஷ்ணவேனி குடும்பத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த மல்லிகா விஷம் குடித்தார். இதனையடுத்து, அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நலம் பெற்றார். 10 நாட்கள் சிகிச்சை முடித்த பின்னர் வீடு திரும்பினார் மல்லிகார்.
தற்போது தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், தனது கணவர் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அவரது தாய் கிருஷ்ணவேணியும் அவரது தம்பி சண்முகராஜன் ஆகியோர் கொலை செய்திருப்பதாகவும், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.