இரவில் தாய், தந்தை செய்த காரியம் - கண் விழித்து பார்த்த குழந்தைகள் கதறி அழுத கொடூரம்!

tamilnadu-samugam
By Nandhini Jul 02, 2021 10:04 AM GMT
Report

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (36). இவர் ஜேசிபி இயந்திர ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர்.

தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது தாயும், தந்தையும் வீட்டிலுள்ள ஒரே பேனில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அலறினார்கள். தூக்கக் கலத்தில் இருந்த இரு குழந்தைகள் அப்பா, அம்மாவை அழைத்தும் பெற்றோரிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததால் செய்வதறியாது குழந்தைகள் கதறியழுதுள்ளனர்.

இரு குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, கண்ணனும், இந்துமதியும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் சடலமாக இருந்தனர். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இருவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கா என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இரவில் தாய், தந்தை செய்த காரியம் - கண் விழித்து பார்த்த குழந்தைகள் கதறி அழுத கொடூரம்! | Tamilnadu Samugam