17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு நடந்த சோகம்!

tamilnadu-samugam
By Nandhini Jun 30, 2021 12:31 PM GMT
Report

பெங்களூரு மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதிநவீன வசதி கொண்ட செல்போன் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். அதில், வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து, பேஸ்புக்கில், அந்த சிறுவனுக்கு பெங்களூவைச் சேர்ந்த ரூபா (20) என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

ரூபா தன்னுடைய காதலை தெரிவிக்க, இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். சிறுவன் தனக்கு 17 வயது தான் ஆகிறது என்று கூறியும், ரூபா உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரை விரட்டி, விரட்டி காதலித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, இருவரும் பெங்களூருவிலும், பிரம்மசமுத்திரா கிராமத்திலும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இரு விட்டாரும் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 16ம் தேதி பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரூபாவும், அந்த சிறுவனும் பிரம்மசமுத்திரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், 17 வயது சிறுவனை, இளம்பெண் திருமணம் செய்திருப்பதாக கூறி சக்கராயப்பட்டணா குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் செல்ல, அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரி சகீர் தாஜ் தலைமையிலான அதிகாரிகள், சக்கராயப்பட்டணா போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நடத்தப்பட்ட விசாரணையில், அனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ரூபாவை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு நடந்த சோகம்! | Tamilnadu Samugam