சேலம் அருகே போலீசார் தாக்கியதில் மயங்கி விழுந்த நபர் பலி! வீடியோ வெளியானதால் பரபரப்பு
ஆத்தூர்- இடையப்பட்டி சோதனைச் சாவடியில் வெள்ளையன் என்ற முருகேசன் குடிபோதையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் அவர் மயங்கிய கீழே விழுந்தார். மயங்கி கீழே விழுந்ததை மீட்டு உடனடியாக போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர்கள் அவருக்கு தலையில் அடிப்பட்டதால் உயிரிழந்ததாக கூறினர். தற்போது அவர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம், ஆத்தூர், இடையப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் தாக்கப்பட்ட வெள்ளையன் (எ) முருகேசன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
— அஇஅதிமுக (@ADMKofficial) June 23, 2021
இதைப்பற்றி எந்த மீடியாவும் வாய் திறக்காதது ஏன்? ?#JusticeforMurugesan pic.twitter.com/KfczH9QC19

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
