பெண் காவல் ஆய்வாளர் தகாத வார்த்தையால் திட்டியதால் விரக்தியில் பெண் காவலர் தற்கொலை முயற்சி!
காவல் ஆய்வாளர் சராமரியாக திட்டியதால் விரக்தி அடைந்த பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலையத்தில் கஜலட்சுமி (23) என்பவர் பெண் காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தாய், தந்தைக்கு கொரோனா ஏற்பட்டது.
இதனால், இவர் சொந்த ஊருக்கு சென்றார். பெற்றோரை பார்த்து விட்டு வந்துள்ளார். இருந்தாலும் பெற்றோருடன் தங்க முடியவில்லை என்ற ஏக்கம் கஜலட்சுமிக்கு மிகுந்த மனஉளைச்சலை கொடுத்துள்ளது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் திருப்பூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, பெண் காவலர் கஜலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் கஜலட்சுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் காவலர்கள் தங்கும் குடியிருப்புக்கு சென்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றி செய்துள்ளார்.
இதை அறிந்த சக காவலர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து கஜலட்சுமியை காப்பாற்றினார்கள். இதனையடுத்து, திருப்போரூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலைச்செல்வி சக காவலர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், அதனால் பல காவலர்கள் மனஉளைச்சலில் ஆளாகி இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொண்டு கேட்டபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.