மகளை காதலித்த வாலிபரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த தந்தை!
மகளை காதலித்த வாலிபரை தந்தை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாலிபர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில், தனசேகரும், பெங்கரகுண்டாவை சேர்ந்த சைலஜாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, ஊரடங்கு காரணமாக தனசேகர் பெங்களூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், மகளின் காதலை விரும்பாத சைலஜாவின் தந்தை பாபு திருமணம் தொடர்பாக பேசலாம் என்று மகள் செல்போனில் தனசேகரை கடந்த சனி கிழமை அழைத்துள்ளார்.
பேசுவதற்காக சென்ற தனசேகரை சைலஜாவின் தந்தை தன்னுடைய தோட்டத்திற்கு வர அழைத்து துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்து புதைத்துள்ளார். மகனை காணாமல் தேடிய தனசேகரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் கடந்த 4 நாட்களாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். விசாரணையில், சைலஜாவின் தந்தை தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது.
தனசேகரை கடந்த 4 நாட்களாக தீவிரமாக தேடி வந்த போலீசார், அவருக்கு இறுதியாக வந்த செல்போன் அழைப்பு அடிப்படையில் விசாரணை நடத்தி கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் பாபுவின் தோட்டத்தில் இருந்து தனசேகர் உடலை இன்று தோண்டி எடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் சைலஜாவின் தந்தை பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.