கொரோனாவின் உருமாற்றம்தான் கருப்பு பூஞ்சையா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
கொரோனாவின் உருமாற்றம்தான் கருப்பு பூஞ்சையா? என்று பலருக்கு தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலை பரவியபோது யாருக்கும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிதீவிரமாக பரவி நாட்டு மக்களை படாய் படுத்தி வருகிறது. கொரோனாவின் 2ம் அலை வீரியம் கொண்டதாக உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறுகையில், “தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கண், மூக்கு, மூளையில் ஏற்படும் பாதிப்புகள் கருப்பு பூஜைக்கான அறிகுறிகள்தான். தமிழகத்தில் கொரோனா வருவதற்கு முன்பே கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்துள்ளது. இது புதிய நோய் கிடையாது என்றார்.