இவர்களால்தான் தமிழகம் காப்பாற்றப்பட்டு வருகிறது : எடப்பாடி பழனிசாமி

tamilnadu-samugam
By Nandhini May 25, 2021 07:05 AM GMT
Report

கொரோனா பெருந் தொற்று பரவலில் முன்களப் பணியாளர்களின் தியாகங்கள் மட்டுமே நம் தமிழ்நாட்டை காப்பாற்றப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பவானி. இவர் பெருநகர துணை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி குணமாகி வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது, பவானிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதன் காரணமாக 28ம் தேதி மீண்டும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், சென்னை மாநகராட்சியில் துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த அன்புச்சகோதரி பவானி என்பவர் 22-04-2021 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,5 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி யுள்ளார்.

28-04-2021 அன்று, அதே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலர் படுக்கை கிடைக்காமல் வெளியே உயிருக்குப் போராடுகின்றனர் என்பதை அறிந்து, தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து,12-05-2021 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில்,மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த 19ஆம் தேதி உயிரிழந்தார் என்பதையறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர்களைப் போன்ற முன்களப் பணியாளர்களின் தியாகங்களினால் மட்டுமே நம் தமிழகம் காப்பாற்றப்படுகிறது. அவரின் தியாகத்தை வணங்கி, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.