கனமழை எதிரொலி - தமிழகத்தில் 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

tamilnadu-rain-school-collage-holiday
By Nandhini Nov 26, 2021 03:25 AM GMT
Report

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 25 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், இன்றிலிருந்து 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மிக பலத்த மழை பெய்யும் என்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் பின்வருமாறு -

சென்னை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்