இன்று இந்த 9 மாவட்டங்களில் மிக கனமழை– காற்றின் வேகம் அதிகரிக்கும்
தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தற்போது இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு வந்துள்ளதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி, கன்னியாக்குமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனால், குமரி பகுதி, தென் கடலோர தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மற்றும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். அதன்படி,சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் IBC Tamil
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் IBC Tamil