மக்களே அலார்ட் - 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

tamilnadu-rain
By Nandhini Nov 24, 2021 03:16 AM GMT
Report

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் நோக்கி நகர்ந்து வருவதால் இன்று திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும். இதனால், நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் சென்னை ,ராமநாதபுரம், திருநெல்வேலி ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். நாளை மறுதினம் மற்றும் 27ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களே அலார்ட் - 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல் | Tamilnadu Rain