காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

tamilnadu-rain
By Nandhini Nov 18, 2021 09:55 AM GMT
Report

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வடதமிழகம் - தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் அதிக கனமழை தொடர உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையிலிருந்து 310 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 300 கி.மீ தொலைவிலும் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருக்கிறது.

இதனால், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Tamilnadu Rain