‘கனமழை பார்ட் - 2’ - சென்னையை புரட்டிப்போடப்போகும் அடைமழை - தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் பதிவு

tamilnadu-rain
By Nandhini Nov 16, 2021 07:38 AM GMT
Report

கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரியில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது.

இதனால், கடும் பாதிப்பை சென்னை சந்தித்தது. பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. தற்போதுதான், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடிவடைந்து தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது -

"மீண்டும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.

மழை வருவதற்கு இன்னமும் 40 மணி நேரம் உள்ளது. சென்னையில் மழை மெல்ல மெல்ல அதிகரித்து கனமழையாக பெய்யக் கூடும். இதனை உறுதிசெய்ய இன்னும் 24 மணி நேரம் நமக்கு தேவைப்படும். இன்னும் ஒரு நாள் நாம் பொறுமையாகக் கவனிக்க வேண்டும்.

அதேசமயம் நவம்பர் 7, நவம்பர் 11ஆம் தேதிகளுக்குப் பிறகு, நவம்பர் 18ம் தேதியில் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மழை குறையலாம். தமிழ்நாட்டின் பல உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் நல்ல மழை பெய்யும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.