தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டப்போகும் கனமழை – வானிலை ஆய்வு எச்சரிக்கை
கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.
மேலும்,சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல்,மதுரை ஆகிய பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல, கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
இவ்வாறு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.