வசமாக மாட்டிக்கொண்ட இளங்கோவன் - ரூ.70 கோடிக்கு முதலீடு செய்தது கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

tamilnadu-raidu-elangovan-home
By Nandhini Oct 24, 2021 02:25 AM GMT
Report

தமிழக மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அந்த சோதனையில், ஐந்தரை லட்சம் மதிப்பிலான அந்நிய செலாவணியும், 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

இளங்கோவனுக்கு தொடர்புடைய சென்னை, கோவை, நாமக்கல், திருச்சி, சேலம் என 36 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணி, 25 கோடி ரூபாய் மதிப்பிலான உள்நாட்டு பங்கு வர்த்தக முதலீடுகள் மற்றும் 45 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நிறுவன பங்கு முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு நகை கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20 கிலோ தங்க நகைகள் மற்றும் 280 கிலோ வெள்ளி நகைகள், இருப்பை விட கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.