தமிழகத்தில் மின்தடைக்கு காரணம் நிர்வாக சீர்கேடுதான் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில்,
2014-ம் ஆண்டுக்கு முன்புவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் (இலங்கை கடற்படையால்) தினந்தோறும் ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிட்டதட்ட 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பின்பு பிரதமர் மோடியின் தலையீட்டால் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் கூட இல்லை.
அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நம்முடைய மீனவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது.
மேலும் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் மின்தடை என்பதே இல்லாமல் இந்தியா ஒரு மின்மிகை நாடாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மின்தடை ஏற்படுவதற்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.