முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

tamilnadu-politics-samugam
By Nandhini Jun 16, 2021 06:40 AM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் கேட்டு அளித்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியுள்ளார் என்றும், நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடபோவதாக கூறி மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு! | Tamilnadu Politics Samugam

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணிகண்டனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அப்போது காவல் துறை தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை ஏற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்வதற்கான தடை ஜூன் 9ம் தேதி முடிந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.