இன்று மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட உள்ளது.
இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் அருகில் ஊர் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.77 ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை விவசாய பெருங்குடி மக்களின் கலந்து ஆலோசித்து இந்த ஆண்டு முறையாக மேற்கொள்ளப்பட உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 65 .11 கோடி மதிப்பீட்டில் 648 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இதனால், எல்லா பகுதிகளுக்கும் தேவையான அளவு தண்ணீர் கொண்டு சேர்க்க முடியும். விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சி மருந்து மற்றும் இதற்குப் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அலையை திறந்து வைக்க உள்ளார். மேட்டூரில் நாளை திறக்கப்படும் தண்ணீர் 16ம் தேதி கல்லணையை வந்து சேரும்.
இதனையடுத்து, கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள், 26 ஆயிரம் வாய்க்கால்கள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு பயன் கொடுக்கும். இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.