அரசு ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாம்!
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர உழைத்துவரும் தமிழக முதல்வரை எங்கள் கூட்டமைப்பு பாராட்டுகிறது.
முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம். அதையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், தொடர்ந்து கொரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்கள பணியாளர்களைத் தவிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.