11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன? - தமிழக அரசு

tamilnadu-politics-samugam
By Nandhini Jun 05, 2021 05:17 AM GMT
Report

தமிழகத்தில் ஜூன் 7 முதல் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 14ம் தேதியிலிருந்து காலை 6 மணி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -

கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக உள்ளது.

இதனால், இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் வருகின்ற 7ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.

காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி கொரோனா குறையாத 11 மாவட்டங்களில், மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படும் அனுமதி அளிக்கும் பொருட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகள் அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் என்னென்ன? - தமிழக அரசு | Tamilnadu Politics Samugam