என் உயிரையும் பணயம் வைத்து உள்ளே சென்றேன் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

tamilnadu-politics-samugam
By Nandhini May 31, 2021 06:58 AM GMT
Report

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

நேற்று கோவைக்கு சென்றிருந்த தமிழக முதல்வர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், கொரோனா வார்டுக்குள்ளேயே சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.

முதல்வர் கொரோனா நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது பெரும் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சிகிச்சை பெறும் நோயாளிகள், தங்கள் உறவுகளை சந்திக்க முடியாதபோது, முதல்வர் நேரில் வந்து நலம் விசாரித்ததால், நோயாளிகளும், நோயாளிகளின் குடும்பத்தினர் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.

இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள். எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்” என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்ததாவது

Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.

மருந்தோடு சேர்த்து மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் நம்பிக்கையும், ஆறுதலும் தான் நோயைக் குணமாக்கும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்! Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று என் மீது அக்கறை கொண்டவர்கள் கூறினார்கள்.

இருந்தாலும், என் உயிரையும் பணயம் வைத்து, நான் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இப்பெருந்தொற்றிலிருந்து நாம் மிக விரைவில் வெல்வோம் என்றார். 

என் உயிரையும் பணயம் வைத்து உள்ளே சென்றேன் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் | Tamilnadu Politics Samugam

கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் - ஊடகங்கள் புகழாரம்

கொரோனா நோயா­ளி­க­ளைக் காண ‘பிபிஇ’ கவச உடை அணிந்து முதல்வர் மருத்துவ அறைக்குச் சென்று, “எப்­படி இருக்­கீங்க.. மூச்சு விட முடி­யுதா.. மருத்­து­வர்­கள் எப்­படிப் பார்த்­துக்­கொள்­கி­றார்­கள், சீக்­கி­ரம் குண­ம­டைந்து விடு­வீர்­கள்,” என்று ஆறு­த­லாக நோயா­ளி­க­ளி­டம் பேசி­னார். 

“நாட்­டி­லேயே ‘பிபிஇ’ கவச உடை அணிந்து கொரோனா நோயா­ளி­களை எந்த மாநில முதல்­வ­ரும் இது­வரை சந்­தித்­தது  கிடையாது.

மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் சென்று பார்­வை­யிட்­டா­லும்­கூட, நோயா­ளி­க­ளின் வார்­டுக்கு முதல்­வர்­கள் யாரும் இது­வரை சென்­றது இல்லை.

ஆனால் முதல் முறை­யாக முதல்­வர் ஸ்டா­லின் நேர­டி­யாக நோயா­ளி­க­ளைச் சந்­தித்­துள்­ளார்  என்றும், கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஒரே முதல்வர் ஸ்டாலின் என்றும் ஊடகங்கள் தமிழக முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளன. 

என் உயிரையும் பணயம் வைத்து உள்ளே சென்றேன் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் | Tamilnadu Politics Samugam

என் உயிரையும் பணயம் வைத்து உள்ளே சென்றேன் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் | Tamilnadu Politics Samugam

என் உயிரையும் பணயம் வைத்து உள்ளே சென்றேன் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் | Tamilnadu Politics Samugam