வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – அதிரடியாக முடிவெடுத்த உதயநிதி!

tamilnadu-politics
By Nandhini Jul 25, 2021 04:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது, சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவர் அத்தொகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று, அத்தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வந்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் ஒவ்வொரு செயல்பாடுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால், பல மாதங்களாக அவர் நடிப்பதை தள்ளி போட்டு வந்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் அருண் காமராஜா இயக்கத்தில் ஆர்டிகிள் 15 என்ற ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்து விட்டதாம். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தினமும் தொகுதி மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வந்த உதயநிதி திடீரென்று படப்பிடிப்புக்கு சென்று விட்டதால் அத்தொகுதி மக்கள் சிலர் முக்கிய பிரச்சனைகளுக்காக உதயநிதியின் வீடு தேடி சென்றுள்ளனர்.

அப்போது அங்கே இருந்த ஊழியர்கள், எம்.எல்.ஏ இல்லை... அவர் ஷூட்டிங் விஷயமாக வெளியே சென்று இருக்கிறார் என்று சொல்லி அனுப்பியுள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், கட்சிப் பணிகள் இப்படி பிசியாக இருக்கும்போது இன்னமும் ஏன் சினிமாவை விடாமல் உள்ளாய் என்று கேட்டுள்ளாராம்.

இதனால், சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துள்ளாராம். இதனால், மாரி செல்வராஜின் படத்தில் மட்டும் நடித்து வருகிறாராம். 

வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – அதிரடியாக முடிவெடுத்த உதயநிதி! | Tamilnadu Politics