அமெரிக்க வாழ் தமிழர்கள் ரூ.3 கோடி நிதியுதவி – நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

tamilnadu-politics
By Nandhini Jun 05, 2021 04:04 AM GMT
Report

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சார்பில் ரூ. 3 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது.

இந்த கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முதல்வர் அனைவரும் நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், நடிகர், நடிகைகள், தொழில் நிறுவனங்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் முதல்வருக்கு நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும், அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் ரூ.3 கோடி தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி தமிழக முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு-

அமெரிக்க வாழ் தமிழர்கள் ரூ.3 கோடி நிதியை வழங்கியுள்ளீர்கள். இதற்கான முயற்சி எடுத்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை, ஐஐடி முன்னாள் மாணவர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழர்களுக்காக உதவ முன் வந்த அமெரிக்க மக்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டி இருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் உங்களை மறக்க மாட்டோம். நீங்கள் புலம்பெயர்ந்து சென்று இருந்தாலும் நம்மை இணைப்பதும் கிடைப்பதும் தாய் மொழியாம் தமிழ் மொழி தான். அந்த தமிழ் மொழி போல் வாழ்க என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.