உங்கள் பகுதியில் நடமாடும் காய்கறி வாகனம் வரவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழைக்கலாம்!
சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக 1000 நடமாடும் காய்கறி வாகனங்கள் சேவையை கே.கே. நகரில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -
சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார். அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் காய்கறி வாகனங்கள் வராத பகுதி குறித்து மக்கள் 044- 45680200 என்ற எண்ணிற்கு அழைத்து சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.