ஜெயலலிதா இல்லாததால் எங்களை மிரட்டுகிறார்கள் - பழனிசாமி ஆதங்கம்
tamilnadu-palanisamy
By Nandhini
டெண்டர் விவகாரத்தில் என் விளக்கத்திற்கு திமுக பதில் சொல்லவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து, மதுரையில் பழனிசாமி கூறுகையில், டெண்டர் விவகாரத்தில் என் விளக்கத்திற்கு திமுக பதில் சொல்லவில்லை. பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்யும். தினகரனையும் அழைக்கவில்லை, சிலர் பாதை மாறி சென்றார்கள், அவர்களை தான் அழைத்தோம். ஜெயலலிதா இல்லாததால் எங்களை மிரட்டிப் பார்க்கிறார்கள். அதிமுகவை சேர்ந்தவர்கள் யாருக்கும் பயம் கிடையாது என்றார்.