தமிழகத்தில் புதிதாக 28,515 பேருக்கு கொரோனா தொற்று
Covid
New
Case
Tamilnadu
By Thahir
தமிழகத்தில் புதிதாக 28,515 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினம் தோறும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 1,46,798 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 28,515 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து 28,620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கபடப்டவர்களின் எண்ணிக்கை 32,52,751ஆக உயர்ந்துள்ளது.
இதில் 3001805 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,412 ஆக உயர்ந்துள்ளது.