ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
ஆளுநர் ரவியுடன் தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மிக முக்கியமான சந்திப்பாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர முதலமைச்சர் அமைச்சர்களை அனுப்பி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.