அமைச்சர் சேகர்பாபு மகள் திடீர் காதல் திருமணம் - பாதுகாப்பு கோரி கர்நாடகா போலீசிடம் பரபரப்பு புகார்

Daughter Minister Tamilnadu love marriage video post மகள் Sekar-babu அமைச்சர் சேகர்பாபு காதல் திருமணம் போலீசிடம் புகார்
By Nandhini Mar 08, 2022 06:54 AM GMT
Report

அமைச்சர் சேகர்பாபு மகள் திடீர் காதல் திருமணம் செய்து, பாதுகாப்பு கோரி கர்நாடகா போலீசிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவருடைய மகள் ஜெயக்கல்யாணி. இவர் தற்போது சதீஷ் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, தந்தையிடமிருந்து பாதுகாப்புக் கோரி கர்நாடகா போலீசாரிடம் மனு கொடுத்துள்ளார். பிறகு, திருமண கோலத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,

வணக்கம்.. என் பெயர் ஜெயக்கல்யாணி. என் அப்பா பெயர் சேகர்பாபு. இவர் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். என் கணவர் பெயர் சதீஷ். நாங்கள் ஒருவரையொருவர் 6 வருடமாக காதலித்து வந்தோம். எங்கள் இருவர் வீட்டில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம். நான் எம்.பி.பி.எஸ். படித்திருக்கிறேன். என் கணவர் டிப்ளமோ முடித்து, சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நாங்கள் இருவரும் மேஜர். எங்களை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.