மாரிதாஸை டிசம்பர் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் மாரிதாஸை வரும் டிசம்பர் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
போலி இ-மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இவர் மேல் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், இன்று யூடியூபர் மாரிதாஸ் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, யூடியூபர் மாரிதாஸை வரும் டிசம்பர் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.