தேசிய விவசாயிகள் தினம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
விவசாயம் மற்றும் விசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி விவசாயிகளின் பாதுகாவலராக விளங்கிய இந்தியாவின் 5-வது பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 23-ம் தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம் உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்! என்று பதிவிட்டுள்ளார்.
உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
— M.K.Stalin (@mkstalin) December 23, 2021
உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்!
உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்!#NationalFarmersDay