தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? - முதலமைச்சர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்த ஊரடங்கு வரும் 9-ம்தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிகிறார்.
தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.