இங்கு நிறைய பேச விரும்பவில்லை, என் செயலில் செய்து காட்டுகிறேன் – நீதிபதி பண்டாரி
பணியில் பயமோ, பராபட்சமோ என்னிடம் இருக்காது. இங்கு நான் நிறைய பேச விரும்பவில்லை. என் செயலில் காட்டுவேன் என்று நீதிபதி பண்டாரி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் உள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து, நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றபட்டுள்ளார். இந்நிலையில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் நீதிபதி பண்டாரி பேசுகையில், பணியில் பயமோ, பரபட்சமோ என்னிடம் இருக்காது.
இங்கு நிறைய பேச விரும்பவில்லை. என் செயலில் காட்டுவேன். தினமும் சில வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள். தமிழகத்தில் பிறக்க வேண்டுமென கனவுகண்டேன். இங்கு பணியாற்றுவதன் மூலம் அந்த கனவி நனவாகி இருக்கிறது என்றார்.