ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த புறப்பட்டார் சசிகலா!

tamilnadu-jayalalithaa-memorial-sasikala
By Nandhini Oct 16, 2021 05:23 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்த புறப்பட்டிருக்கிறார்.

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக அதிமுகவினரால் கொண்டாடப்படும் உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அதிமுக தலைமை மூலம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா மறைந்த முன்னாள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்னை மெரினாவுக்கு புறப்பட்டுள்ளார். சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்டுள்ளார். மெரினாவில் எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்த இருக்கிறார். 

ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த புறப்பட்டார் சசிகலா! | Tamilnadu Jayalalithaa Memorial Sasikala