தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தினசரி பாதிப்பு 23,459- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தொற்று பாதிப்பு 23,989- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 15 ஆயிரத்து 948- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 10,988- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,43,536- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 8,978- ஆக உயர்ந்துள்ளது.