“கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ’’ : வாக்குப்பதிவு நாளான்று விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு

localholiday tamilnadugvt locaelection2022
By Irumporai Feb 11, 2022 10:41 AM GMT
Report


வாக்குபதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் பேரூராட்சி  என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, மொத்தம் 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.  

இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பிப். 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.