தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: அரசு அறிவிப்பு

School Students All Pass
By mohanelango Jun 01, 2021 06:07 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாம் அலை அச்சம் இருப்பதால் பள்ளிகளை தற்போதைக்கு திறப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாக தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.