பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு - என்னென்ன பொருட்கள்?
பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும். உழவர் பெருக்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
பரிசு தொகுப்பு
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இலவச வேட்டி சேவைகள்
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேவைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிள்ளையான கூறியதால் ரவிராஜை கொன்ற சம்பத் மனம்பேரி! மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு IBC Tamil
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan