தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கு நாளை மரியாதை - தமிழக அரசு

MGR respect Government of Tamil Nadu former chief minister
By Nandhini Jan 16, 2022 07:59 AM GMT
Report

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆர். 105 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

இதற்கிடையில், எம்.ஜி.ஆர்.மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,நாளை ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.