நடுக்கடலில் தமிழக மீனவர் மாயம்
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழ்நாடு மீனவர் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் இரண்டு படகுகளில் யாழ்.பருத்தித்துறை - கற்கோவளம் கடற்பரப்புக்குள் நுழைந்த சமயம் அதனை இலங்கை கடற்படையினர் விரட்ட முற்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக மீனவர்களின் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
இவ்வாறு மூழ்கிய படகில் மூன்று மீனவர்கள் இருந்தபோதும், இரு மீனவர்கள் மட்டுமே கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அதாவது இந்த சம்பவத்தில் மீனவர்கள் சுகந்திரன், சேவியர் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய ராஜ்கிரண் என்ற மீனவரைக் காணவில்லை.
இன்று அதிகாலை வரை அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர் மீட்கப்படாததால் உயிராபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகிறது.
அண்மையில் நாகை மாவட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
தற்போது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் காணாமல் போனது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.