புதிய அமைச்சர்களுடன் அமைச்சரவைக் கூட்டம் -முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியிடம் பரிந்துரை செய்தார் . இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அமைச்சரவை மாற்றத்திற்குக் கடந்த செப். 28-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இந்த ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த செப்.29-ம் தேதி அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர். அந்த வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,
இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், அமைச்சர்களாகப் பொறுப்பேற்றவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மேலும் புதியதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு, அதாவது வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,கோவி. செழியன் - உயர் கல்வித்துறை, (தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)
அமைச்சரவை
ஆர்.இராஜேந்திரன் - சுற்றுலா, சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடுத்துறைன், சா.மு.நாசர் - சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர் நலன், வஃக்ப் வாரியம் துறைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.