தேர்தல் அதிகாரிகள் முக்கிய தகவல்

Election
By Fathima Mar 25, 2026 09:32 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர், 50,000க்கும் மேல் அதிகமாக எடுத்து செல்லப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.

இல்லையென்றால் அத்தொகை பறிமுதல் செய்யப்படும், இந்நிலையில் இதில் சில தளர்வுகளை அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மருத்துவ காரணத்திற்காக மக்கள் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ் அப் ஆதாரம் போதும் என தெரிவித்தார்.