தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

corona tamilnadu
By Irumporai Aug 18, 2021 05:10 PM GMT
Report

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு, சற்று குறைய தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆயிரத்து 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை மொத்தமாக 34 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து புதிதாக ஆயிரத்து 908 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 83ஆக உள்ளது.

சென்னையில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் அதிகபட்சமாக 210 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.