தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? - வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம், கடந்த சில மாதங்களாக குறைந்துக் கொண்டு வந்தது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மின்னல் வேகத்தில் துரிதமாக நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளில் பரவி வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனையடுத்து கொரோனா நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போது, தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் ஒமைக்ரான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனினும், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சுமார் 600 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, 1,800 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், 150-க்கு கீழ் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது, ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்புடன், புதிய வகை ஒமைக்ரான் தொற்றும் பரவி வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டு வருகிறது.
இதே நிலை நீடித்தால், வரும் 15ம் தேதிக்கு மேல் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னையில் தினசரி பாதிப்பு 5,000-ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.