தமிழகத்தில் 8000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு - தொடர்ந்து தீவிரமடையும் கொரோனா பரவல்

corona Tamil Nadu Chennai
By mohanelango Apr 14, 2021 12:42 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. 

தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் சீராக அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

தமிழகம் முழுவதும் இன்று 97668 கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 7819 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக 2,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. பரிசோதனைகளில் பாசிட்டிவ் பதிவாகி வரும் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கடந்த ஆண்டைப் போல தான் தற்போதும் சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற ஊர்களில் அதிகரித்து வருகிறது.

நிறுவனங்கள் முடிந்த வரையில் வீட்டில் இருந்து பணி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டு வருகிறது”