தமிழகத்தில் இன்று மட்டும் 1630 பேருக்கு கொரோனா உறுதி

corona tamilnadu
By Fathima Aug 22, 2021 01:15 PM GMT
Report

தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 998 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,630 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 827 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 47 ஆயிரத்து 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.