தமிழகத்தில் எகிறும் கொரோனா பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்

tn government covid 19 active cases
By Petchi Avudaiappan Aug 04, 2021 03:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழகத்தில் ஒரேநாளில் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 38பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,197 ஆக உள்ளது. மேலும் 2,011 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,13,087 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 154பேருக்கும், சேலத்தில் 83 பேருக்கும், தஞ்சாவூரில் 110 பேருக்கும்,திருவள்ளூரில் 99 பேருக்கும், திருப்பூரில் 92 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.