தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகில் திமுக அலுவலக கட்டுமான பணிகள் நடந்தது வந்தன. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து, நாளை (சனிக்கிழமை) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த கட்டிடத்துக்கு அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டி, பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதலமைச்சர் சந்தித்து பேசியுள்ளார்.